இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின் இறுதி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
இந்தியாவின் கையில் ஆட்டம் இருந்த நிலையில், இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு சோகமான நாள் என்றாலும்,இந்த மோதலுக்கு முன் தகுதி நம்பிக்கையில் தொங்கிக்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இது மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவர்களின் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது, இது அவர்களுக்கு ஒரு முக்கியமான புள்ளியைப் பெற்றது மற்றும் இந்தியாவை புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளியது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,இந்தியாவின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் வீடியோவின் ஆரம்பத்தில் பதற்றமாகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.இறுதியில் நான்காவது மற்றும் கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியதால் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நடனமாடத் தொடங்கினர்.
வெற்றி என்பது எப்பவுமே நிரந்தரமாக யாருடனும் தங்கி விடாது.தோல்வி
என்பது ஒரு போதும் முடிவாக இருக்காது.இந்திய பெண்கள் அணி மீண்டும் மீண்டு வரும்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…