வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய அமெரிக்கா ..!

Published by
அகில் R

சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி.

வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்கத்தை சிறப்பாக அமைத்து விளையாடியது. தொடக்க வீரர்கள் அமைத்த ஒரு அருமையான கூட்டணியில் ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி அமெரிக்கா அணி நகர்ந்தது. இவர்களை தொடர்ந்து ஆரோன் ஜோன்ஸ் நிலைத்து பொறுமையாக விளையாட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது.

அமெரிக்கா அணியில் மோனான்க் பட்டேல் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல வங்கதேச அணியில் ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்திபிஸுர் ரஹ்மான், ரிஷாட் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதனை தொடர்ந்து எளிய இலக்கான 145 ரன்களை எடுக்க வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே ரன்களை எடுக்க தவறி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மேலும், எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை இழந்து வெளியேறி கொண்டிருந்தனர். இதனால் இறுதியில் விறுவிறுப்பாக சென்ற போட்டியில் 19.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அமெரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

அதே போல அமெரிக்கா அணியில் அலி கான் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

20 minutes ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

52 minutes ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

2 hours ago

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

3 hours ago