U-19 உலகக்கோப்பை: மிரட்டிய ஷேக் ரஷீத், யாஷ் துல்- ஆஸ்திரேலியாவிற்கு 291 ரன் இலக்கு ..!

Published by
Castro Murugan

2-வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து  290 ரன்கள் எடுத்துள்ளது.

U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.  இன்றைய  2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி,  ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.

இதனால், இந்திய அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 8-வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது.  அடுத்த சில நிமிடங்களில் ஹர்னூர் சிங் 16 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களம்கண்ட ஷேக் ரஷீத், கேப்டன் யாஷ் துல்  இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி 110 ரன்களில் ரன் அவுட்டானார். இவர்கள் இருவரும் கூட்டணியில் 200 ரன்கள் சேர்க்கப்பட்டது. மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷேக் ரஷீத் சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் எடுக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து  290 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 291 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.

Published by
Castro Murugan
Tags: U19CWC2022

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago