U-19 உலகக்கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
U-19 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பங்களாதேஷ், இந்தியா மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பங்களாதேஷ் 37.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த அணியில் மெஹரோவ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ரவி குமார் 3 , விக்கி ஓஸ்ட்வால் 2 விக்கெட்டை பறித்தனர்.
பின்னர் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிங்கிய ஹர்னூர் சிங் 3 பந்தில் டக் அவுட் ஆனார். பிறகு சிறப்பாக விளையாடிய இந்திய அணி 30.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 2-ஆம் தேதி இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோத இருக்கிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…