U-19 உலகக்கோப்பை:ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

Published by
Castro Murugan

2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.நேற்று  2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி,  ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.

இதனால்,இந்திய அணி ரன்கள் எடுக்க தடுமாறியது.இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 8-வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.அப்போது அணியின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது.  அடுத்த சில நிமிடங்களில் ஹர்னூர் சிங் 16 ரன் எடுத்து அவுட் ஆனார்.பின்னர் களம்கண்ட ஷேக் ரஷீத், கேப்டன் யாஷ் துல்  இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர்.அதிரடியாக விளையாடிய கேப்டன் கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி 110 ரன்களில் ரன் அவுட்டானார்.இவர்கள் இருவரும் கூட்டணியில் 200 ரன்கள் சேர்க்கப்பட்டது. மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷேக் ரஷீத் சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் எடுக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து  290 ரன்கள் எடுத்தது.இதனால் 291 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது,

தன்படி,ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக காம்ப்பெல் கெல்லவே,டீக் வில்லி களமிறங்கினர்.ஆனால்,வந்த வேகத்திலேயே டீக் வில்லி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,களமிறங்கிய கோரி மில்லர் நிதானமாக விளையாடி 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர்,காம்ப்பெல் கெல்லவேவும் 30 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

மேலும்,அணியின் கேப்டன் கூப்பர் கோனோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில்,ஷேக் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,களமிறங்கிய லச்லன் ஷா அரை சதம் அடித்தார்.பின்னர் அவரும் விக்கெட்டை இழந்தார்.

இறுதியில்,41.5 ஓவர் முடிவிலேயே ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியைப் பொறுத்தவரை,அதிகபட்சமாக ரவிக்குமார்,நிசாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.இதனால்,96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று,இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.இதனைத் தொடர்ந்து,நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் நான்கு முறை சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

8 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

8 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

10 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

10 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

11 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

11 hours ago