கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 2 கடிகாரங்கள்..!

Default Image

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள். 

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.

இந்த இரண்டு கடிகாரமும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இந்த இரண்டு கைக்கடிகாரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடிகாரங்களை அவர் துபாயில் வாங்கிய நிலையில், அதற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் கைகடிகாரங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்