முக்கியச் செய்திகள்

நடப்பு சாம்பியனுக்கு பின்னடைவு… உலகக்கோப்பை தொடரில் ரீஸ் டாப்லி விலகல்..!

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி மோசமான ஆட்டம் காரணமாக 22 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு சிரமங்கள் குறையவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து  அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் தனது 9-வது ஓவரில் ரீஸ் டாப்லி பந்துவீசும்போது காயம் அடைந்தார். டாப்லியின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டு  அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த ஓவரில் ரீஸ் டாப்லி ஐந்து பந்துகளை மட்டுமே வீச முடிந்தது.  மீதம் இருந்த பந்தை ஜோ ரூட் வீசி  ஓவரை முடித்தார்.

முதல் ஓவரிலேயே  ரீஸ் டாப்லி குயின்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு முதல் விக்கெட்டை எடுத்து கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரீஸ் டாப்லி 8.5 ஓவர் வீசி 88 ரன் கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார். ரீஸ் டாப்லி  அணியில் இருந்து விலகியது இங்கிலாந்துக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மோசமான பார்ம் குறையாமல் தொடர்கிறது.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. நியூசிலாந்து தவிர இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன.

 

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

6 hours ago
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago
வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

8 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago