நாளை இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…!வெற்றிக்கணக்கை தொடருமா இந்திய அணி …!
சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.இந்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு துவங்குகிறது.இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி வீரர்கள் களமிறங்குகிறார்கள். எனவே, நாளைய போட்டி, ரசிகர்களுக்கு, நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.