இன்று உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு தெரியுமா?

Default Image

நடப்பு உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது.இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் மோதியது.அதில் அரையிறுதிக்கு நியூஸிலாந்து ,இந்தியா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றனர்.

முதல் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றியது கிடையாது.

இதனால் உலகக்கோப்பையை  வெல்ல போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையின் மொத்த பரிசு தொகையை ஐசிசி அறிவித்து உள்ளது.இன்று இறுதி போட்டியில் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 27 கோடியே 42 லட்சம் வழங்கப்படும். இன்றைய இறுதி போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு 13 கோடியே 71 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்து உள்ளது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்