உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய 5-வது நாள் ஆட்டம்,மழை காரணமாக ரத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார்.
அதன்பின்னர்,களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் 101/2 என்ற நிலையில் இருந்தனர்.இதனையடுத்து,இறுதிப் போட்டியின் 4 வது நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.ஆரம்பத்தில் மோசமான வானிலை காரணமாக முதல் அமர்வு தாமதமானது,பின்னர் முழு ஆட்டமும் நிறுத்தப்பட்டது.
முன்னதாக,போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாம் நாள் மோசமான போதுமான வெளிச்சமின்மையால் பாதிக்கப்பட்டது.தொடர்ச்சியான மழை மற்றும் ஈரமான வெளிப்புறம் காரணமாக முதல் மற்றும் நான்காவது நாள் போட்டியும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்,ஐந்தாவது நாள் போட்டியும் வானிலை மாற்றம் காரணமாக ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை 62-67 சதவீத ஈரப்பதத்துடன் மேகமூட்டம் இருக்கும்,இருப்பினும்,உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளதால்,5 ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…