மூத்த வீரர்களுக்கு ஓய்வு கிடைக்குமா..?இன்று இந்தியா -நெதர்லாந்து மோதல்..!

Published by
murugan

2023 ஒருநாள் உலகக் கோப்பையில், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது.  தனது கடைசி லீக் போட்டியை  நெதர்லாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், இந்த கடைசி போட்டியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், இந்த போட்டிக்கு முன்பு தங்களுக்கு நிறைய ஓய்வு கிடைத்துள்ளது. அரையிறுதிக்கு முன் பயிற்சிக்கு இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். இந்திய அணிக்கு 6 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தனது கடைசி போட்டியில் விளையாடியது. எனவே, அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விளையாட தயாராக உள்ளனர்.

இந்த ஓய்வு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் நமக்கு உதவும். அரையிறுதிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என கூறினார். நெதர்லாந்துக்கு எதிராக சீனியர் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இதற்கு காரணம் பும்ரா காயத்தில் இருந்து திரும்பி வந்து தற்போது வரை தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவது தான்.

அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு ஓய்வு கொடுக்க முடியும். அதேசமயம் இந்த போட்டியில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது.

Published by
murugan

Recent Posts

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

7 minutes ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

1 hour ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

2 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago