இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போல, தமிழகத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்கள் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2016-க்குப் பிறகு டி20 தொடரில் மோதும் இந்தியா- ஜிம்பாப்வே..!
8வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியிலும் 16 முதல் 20 வீரர்கள் வரையில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 70 லட்சம் மட்டுமே தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர்களாக சாய் கிஷோர், நடராஜன், சஞ்சய் யாதவ், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான ஏலத்தில் பங்கேற்றனர். இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி தமிழக வீரர் நடராஜனை 11.25 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் சாய் கிஷோரை 22 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதுவரை டிஎன்பிஎல் வரலாற்றில் அதிகத் தொகைக்கு ஏலம் போன வீரர் சாய் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, திருச்சி அணி சார்பாக சஞ்சய் யாதவ் 22 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அணிக்காக இந்திய அணி வீரர் அஸ்வின் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…