இதுதான் பஞ்சாப் அணியின் பலம்… கம்பீர் ஓபன் டாக்…!

Default Image

பஞ்சாப் அணியின் பலம் பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களை கூறியுள்ளார். 

நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக  150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய  பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு சென்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியை குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியது, பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதுவரை 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 3 போட்டிகளுக்கு முன்பு கே எல் ராகுலிற்கு அணியில் தேவைப்பட்டது சிறந்த பௌலிங் தான், ஆனால் அது கடந்த 3 போட்டிகளுக்குமுன்பு வரை கிடைக்காமல் போனது. அதற்கு பிறகு நடந்த 3 போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பலம் அவர்களது பந்துவீச்சுதான். வருகின்ற போட்டிகளிலும் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடுவார்கள். பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்