IPL2022: ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்!

Default Image

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆரஞ்சு கேப் மற்றும் குல்தீப் யாதவ் பர்பிள் கேப்-ஐ பெற்றுள்ளனர்.

2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்குவார்கள். அந்தவகையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 50 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் பெற்றார்.

இதனை, இன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்து, தற்பொழுது ஆரஞ்சு கேப்-ஐ பெற்றுள்ளார். மேலும், டெல்லி அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப் பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்