‘அதிக மரியாதை உண்டு’ ! தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆர்வம் காட்டும் ஜஸ்டின் லாங்கர் ?

Published by
அகில் R

சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரின் பதவிக்கு ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக இருப்பதாக அவர் தற்போதைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக உள்ளார் என தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியையும், அதன் மரியாதையையும் மீட்டெடுத்த பெரிய பங்கானது பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கருக்கு உண்டு என்றாலும் கிரிக்கெட் பயிற்சியின் போது சக வீரர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டதன் காரணமாக வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்ட காரணத்தினால், அவரே அந்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றி வருகிறார். மேலும், லக்னோ அணி இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் போகும் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times Of India) பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற ஆர்வம் உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதை குறித்து அவர் பேசிய போது, “நிச்சயமாக நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வமாக தான் இருக்கின்றேன். ஆனால் அதைப் பற்றி நான் தற்பொழுது எதுவும் நினைக்கவில்லை. மேலும், எந்த ஒரு சர்வதேச அணியாக இருந்தாலும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பின் மீதும், அந்த பயிற்சியாளர்கள் மீதும் எனக்கு நிறைய மரியாதை உண்டு. அந்த பதவிக்கு இருக்கும் அழுத்தத்தை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன்.

அதே நேரம் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயலாற்றுவது ஒரு சாதாரண விஷயம் கிடையாது”, என்று ஜஸ்டின் லாங்கர் அந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதே நேரம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) விண்ணப்பித்தவர்கள் யார் என்பது தொடர்பான விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்கப்படாமல் இருப்பதோடு, அதனை காத்தும் வருகின்றனர்.

இதனால் ஜஸ்டின் லாங்கர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பித்தாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் அவரது ஆர்வத்தை பார்க்கும் பொழுது அவர் விண்ணப்பித்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

42 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

46 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago