இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஜோ ரூட்டிற்கு உதவி செய்த இந்திய கேப்டன் விராட் கோலி.
கடந்த 2015-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய – தென்னாப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அப்போது, தென்னாபிரிக்கா வீரர் டு.பிளெசிஸ் அதிரடியாக விளையாடி வந்த அவர், சிக்ஸர் அடிக்க முன்றபோது, திடீரென சறுக்கி கீழே விழுந்தார். பின்னர் தசை பிடிப்பில் தவித்த அவருக்கு இந்திய அணி கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி விரைந்து முதல் உதவி செய்தார். இது அப்போது இணையத்தில் வைராகி, Spirit Of Cricket என்று ரசிகர்கள் பதிவு செய்து, பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், அதுபோன்று ஒரு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்தபோது தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு காலில் மசாஜ் செய்து உதவிய இந்திய கேப்டன் விராட் கோலி. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அன்று தோனி செய்ததைப்போல், இன்று விராட் கோலி செய்துள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர். இதுதான் Spirit Of Cricket என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…