ஒருநாள் கிரிக்கெட்டில், இரட்டை சதம் அடித்த இளம் வீரர்! ஷுப்மன் கில் சாதனை.!

Default Image

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில், 145 பந்துகளில் இரட்டை சதமடித்து, இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதமடித்த ஷுப்மன் கில், 23 வயது மற்றும் 132 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன், இஷான் கிஷன் (24 வயது 145 நாட்கள்) ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்