முதல் போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னை அணியா…? மும்பை அணியா..? கவுதம் கம்பீர் ஓபன் டாக்..!

Default Image

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற மூன்று நாட்கள் உள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த இரண்டு அணி கிரிக்கெட் வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன், கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுமா அல்லது சென்னை அணி வெற்றி பெறுமா என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது, அதற்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

அதில் கவுதம் கம்பீர் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் முதலில் சென்னை மற்றும் மும்பை அணி மோத உள்ளது. என்னைப்பொறுத்தவரை மும்பை அணி சென்னை அணியை எளிதாக சமாளித்து விடும், ஏனென்றால் மும்பையில் பும்ரா போல்ட் போன்ற உலகம் தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ளார்கள்.

அவர்கள் சென்னை அணியின் தரமான பேட்ஸ்மேன்களை சமாளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் சென்னையில் ரெய்னா இல்லாத பின்னடைவை கொடுக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்