டி-20 தொடர் :ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி …!

Published by
Edison

டி-20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி,அத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து டி – 20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி-20 போட்டியானது இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி,களமிறங்கிய எவின் லூயிஸ் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் 34 பந்துகளில் 9 சிக்சர், 4 பவுண்டரி என 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர்,20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 199 ரன்கள் எடுத்தது.

இதனால்,200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கினர்.ஆனால்,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே எடுத்தனர்.மேலும்,வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷெல்டன் காட்ரெல், ரஸ்ஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்காரணமாக,வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.மேலும்,இப்போட்டியில் ஆட்டநாயகனாக எவின் லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.இதற்கிடையில்,விளையாட்டின்போது,ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சிற்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் தொடர் ஜூலை 20 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

Published by
Edison

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

9 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

38 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago