டி20I : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்றைய நாள் (ஜூன்-2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், அமெரிக்கா அணியும் இன்று காலை 6 மணிக்கு டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக கனடா அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய நவ்நீத் தலிவால் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். இவர் அதிரடி காட்டி 44 பந்துக்கு 61 ரன்கள் எடுத்தார் அதில் 3 சிக்ஸர்களும், 6 பவுண்டரிலும் அடங்கும்.
அதன் பின் அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் கிர்டனும் அவருடன் அதிரடி காட்ட கனடா அணியின் ஸ்கோர் உயர்வை கண்டது. சீரான இடைவெளியில் இருவரது விக்கெட்டும் விழுந்த பிறகு கனடா அணியின் விக்கெட் கீப்பரான ஷ்ரேயஸ் மொவ்வா களமிறங்கி ஒரு சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவரில் கனடா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துது. அதன் பின் இமாலய இலக்கை எட்டுவதற்கு பேட்டிங் களமிறங்கியது அமெரிக்கா அணி. முதல் 10 ஓவரில் அமெரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும். ஆனால் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆக்ரோஷமான அதிரடியில் சரிவில் இருந்து அமெரிக்கா அணி மீண்டது.
இருவரும் அரை சதம் கடந்து அபாரமாக கனடா அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தனர். மிகச்சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்து, வெற்றியின் அருகில் எட்டிய போது ஆட்டமிழந்தார். ஆனால், மறுபக்கம் இருந்த ஆரோன் ஜோன்ஸ் மிகச்சிறப்பாக விளையாடி 17.2 ஓவர்களில் அமெரிக்க அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இதன் மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் காரணமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை அமெரிக்க அணி பதிவு செய்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…