ஐபிஎல் 2024 : விக்கெட்டால் நடந்த விபரீதம் ..! சிஎஸ்கே ரசிகரை அடித்தே கொன்ற ரோஹித் ரசிகர்கள் ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை கேலி செய்ததால் மும்பை ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்த சிஎஸ்கே ரசிகர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

கடந்த 27ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியான 8-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 என்ற இமாலய ரன்களை குவித்தது. இந்த போட்டியை மகாராஷ்டிராவில் கோலப்பூரில் உள்ள ஹன்மந்த்வாடி பகுதியில், ஐபிஎல் ரசிகர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பார்த்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து 278 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அப்போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா நன்றாக விளையாடி கொண்டிருக்கையில் திடீரென 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 63 வயதான பந்தோபந்த் பாப்சோ திபிலே என்ற சிஎஸ்கே ரசிகர் ஒருவர், ரோகித் சர்மா அவுட் ஆகிவிட்டார், இனி மும்பை அணி எப்படி இந்த இமாலய இலக்கை எட்டும் என கேலியாக பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ரோஹித் ரசிகர்கள் 2 பேர் பாப்சோ திபிலேவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலில் பாப்சோ திபிலே தலையில் வலுவான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிஎஸ்கே ரசிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ரோஹித் ரசிகர்களான, 50 வயதான பல்வந்த் மகாதேவ் ஜான்ஜே மற்றும் 35 வயதான சாகர் சதாசிவ் ஜான்ஜே ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், ஒரு விக்கெட்டால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் விசாரணையில், ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி படைத்ததால், மகாதேவ் மற்றும் சாகர் சதாசிவ் ஆகியோர் ஏற்கனவே கோபத்தில் இருந்து இருக்கின்றனர். இந்நிலையில், பாப்சோ திபிலே கேலி செய்ததால் ஆத்திரமடைந்த இருவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago