SAvsAUS: ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாயை எதிர் கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். குயின்டன் மட்டுமே 3 ரன்கள் மட்டுமே எடுக்க, டெம்பா பவுமா ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருந்தும் சில நிமிடங்களிலேயே இருவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்தார்கள். இதன்பிறகு, ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் விளையாடினார்கள். இருவரும் தலா 10 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், மழைக் குறுக்கிட்டள்ளதால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் ஆரம்பிக்க, சிறப்பாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட் வீசிய பந்தில் தனது அரைசதத்தைத் தவறவிட்டு, 47 ரன்களில் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து மார்கோ ஜான்சன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் டேவிட் மில்லர் திறம்பட செயல்பட்டு சிக்ஸர்கள், பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார்.
இவருடன் இணைந்து ஜெரால்ட் கோட்ஸி விளையாடினார். ஆனால் 19 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் மில்லர் 80 ரன்களைக் கடந்தார். தொடர்ந்து கேசவ் மகாராஜ் களமிறங்கி 4 ரன்களில் வெளியேற, டேவிட் மில்லர் சதம் அடித்து அசத்தினார். பின் 101 ரன்களில் கம்மின்ஸ் வீசிய பந்தில், டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் ககிசோ ரபாடா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தப்ரைஸ் ஷம்சி மட்டுமே களத்தில் இருந்தார்.
முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்களும், டிராவிஸ் ஹெட் 47 ரன்களும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் இருவரும் தலா3 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்க உள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…