இலங்கை அணி அபார வெற்றி ..! ஹசரங்கா அசத்தல் ..!

Published by
அகில் R

இலங்கையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 3 ஒரு நாள் தொடர், 3 டி20 போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடி வருகிறது. 3  போட்டியை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. (முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது).

அதை தொடர்ந்து டி20 போட்டியில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருந்தனர். இதனால் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்த கடினமான இலக்கை நிர்ணயிக்க வேண்டுமென கட்டாயத்துடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரான  கிரேக் எர்வின் தனது முதல் பந்திலேயே தீக்ஷனாவின் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திருப்பினார்.

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் நிதானமாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிலும் ஹசரங்காவின் மிகவும் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணறியது. இறுதியாக ஜிம்பாப்வே  14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சதம் விளாசி சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!

அந்த அணியின் பிரையன் பென்னட் எடுத்த 12 பந்துகளில் 29 ரன்களே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்து வீச்சில் ஜொலித்தார்.

இதை தொடர்ந்து 83 ரன்கள் என்ற  மிகவும் எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு  ஆரம்பம் முதலே சாதகமாகவே போட்டி அமைந்திருந்தது. மிகவும் எளிதான இலக்கு என்பதால் விக்கெட்டை எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற முனைப்புடன் ஜிம்பாப்வே போராடியது. ஆனால் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிதறிடித்தனர்.

வெகு நேரத்திற்கு பிறகு வீழ்ந்த விக்கெட்டும் ஜிம்பாப்வே அணிக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இலங்கை அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 88 ரன்களை எட்டி போட்டியை வென்றதுடன் இந்த டி20 தொடரையும் கைப்பற்றியது. அந்த அணியில் அதிக பட்சமாக  நிஸ்ஸங்கா ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன்  39* ரன்கள் எடுத்து இருந்தார்.

இதனால் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை இலங்கை அணி வென்றது.

Published by
அகில் R

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 minute ago
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

15 minutes ago
”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

52 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago