19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 12-வது போட்டியாக இன்று இலங்கை அணியும் நமீபியா அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நமீபியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை விட்டு கொடுத்தது.
இலங்கை அணியின் வீரரான சுபுன் வடுகே மட்டும் சற்று நின்று நிதானமாக விளையாடி ரங்களை சேர்த்தார். அவர் மட்டும் ஆட்டமிழக்காமல் 56 ரன்களை சேர்த்திருந்தார். 37.5 ஓவருக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே சேர்ந்திருந்தது. நமீபியா அணியில் வான் வூரன் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!
எளிய இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாததால் அந்த அணி 27 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணியில் விஷ்வ லஹிரு, ருவிஷான் பெரேரா இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 77 ரன்கள் வித்யாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இது இலங்கை அணிக்கு இந்த தொடரின் 2 வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…