இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவித்தது. இந்தியா 283 ரன்கள் எடுத்திருந்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. 4ஆம் நாள் ஆட்டத்தில் கவாஜா – டிம் பெய்ன் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தது. இந்த கூட்டணியை தனது சிறப்பான பந்து வீச்சால் ஷமி கலைத்தார்.
அதன் பின் அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த, ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்திருந்தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு, ராகுல் ரன் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து ஆடிய இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 112/5 ரன்கள் எடுத்தது.இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.இதில் இந்திய அணி 56 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே ,பண்ட் தலா 30 ரன்கள் அடித்தனர்.
இதனால் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…