இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு முன் கேப்டன் விராட் கோலியும் , பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரோஹித் சர்மாவுடன் பிரச்சனை இருப்பதாக வெளியான தகவல் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விராட் கோலி , நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வறையில் நடக்கும் விஷயம் முக்கியமானது. இந்த செய்தி உண்மையாக இருந்திருந்தால் நாங்கள் நன்றாக விளையாடி இருக்க முடியாது.
ஒரு நபரை பிடிக்க வில்லை என்றால் அவரிடம் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது முகத்தில் நீங்கள் பார்க்கலாம். எப்போதும் ரோஹித் சர்மாவை பாராட்டி தான் வருகிறேன். எங்களுக்கும் இந்த பிரச்சினை இல்லை என கூறினார்.
மேலும் இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார். இந்நிலையில் மியாமை நோக்கி நேற்று இந்திய அணி புறப்பட்டனர். அதற்கு முன் இந்திய வீரர்களுடன் கேப்டன் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.ஆனால் அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லை.உங்களுக்குள் பிரச்சனை இல்லை என்றால் ரோகித் சர்மா எங்கே ? ரோகித் சர்மா உடன் பிரச்சனை இருப்பது உண்மைதான் அதனால் தான் ரோஹித் சர்மா புகைப்படத்தில் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…