இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கே.எல்.ராகுல் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்திய அணி தோனி தலைமையில், இருக்கும் போது டி20 உலகக்கோப்பை, ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் இந்த மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனி வைத்துள்ளார்.
இந்நிலையில், தோனி குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் “தோனி நம் நாட்டுக்காக பல முக்கியமான கோப்பைகளை கேப்டனாக இருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். இந்தியாவுக்காக நிறைய பெருமைகளை தேடி தந்துள்ளார். நான் இவற்றை எல்லாம் விட பெருமையாக நினைப்பது என்னவென்றால் சக வீரர்களை மரியாதையுடன் நடத்துவதுதான். அவரிடம் எனக்கு இந்த விஷயம் மிகவும் பிடிக்கும். அவர் சொன்னால் துப்பாக்கி குண்டுகளை எந்தவித யோசனையும் இன்றி தாங்கிக்கொள்வேன்.
கேப்டன் என்றால் முதலில் எங்கள் நினைவுக்கு வரும் பெயர் தோனி மட்டும்தான். ஏனென்றால் அவர் ஒரு சகாப்தம். தோனி கேப்டனாக இருக்கும் போது அவரின் கீழ் விளையாடிய வீரர்கள் இப்பொது விளையாடிக்கிறார்கள் அவர்களிடம் இருந்தது சில நல்ல விசியங்களை கற்று கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…