முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 2-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 60 ரன்னில் எல்பிடபிள்யூ அவுட்டானார். பின்னர் களமிறங்கிய புஜாரா வந்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாச இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்க இருந்தநிலையில் தொடர் மழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 2-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. நாளையை மூன்றாம் நாள் ஆட்டம் அரை மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…