வெற்றியை தொடரும் இந்திய அணி ..! சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபாரம் ..!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

நடப்பாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 43-வது போட்டியில், சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று பார்படாஸ்ஸில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கி விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், விராட் கோலி 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அதன்பின் ரிஷப் பண்ட்டும் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார், அவருக்கு பின் களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவரது அதிரடியால் தான் இந்திய அணியின் எகிற தொடங்கியது. சிவம் துபே 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் ஹர்திக் பாண்டியா இணைந்து விளையாடினார்.

இருவரின் அதிரடி கூட்டணியால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 28 பந்துக்கு 53 ரன்கள் எடுத்தார். அதே போல ஆப்கானிஸ்தான் அணியில் ஃபருக்கி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

அதன்பின் 182 என்ற இமாலய இலக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. எதிர்பார்த்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் அமையாததால் தடுமாறிய ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாததன் காரணமாக விக்கெட்டுகளும் சரிந்து கொண்டே இருந்தது.

மேலும், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களின் மிடில் ஓவர் பந்து வீச்சானது ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டியது. மேலும், பும்ராவின் அட்டகாசமான 3 விக்கெட்டால் ஆப்கானிஸ்தான் அணி முற்றிலும் பொட்டலம் ஆனது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
அகில் R

Recent Posts

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

31 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

59 minutes ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

1 hour ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

3 hours ago