திக் திக் ..! த்ரில் வெற்றியை ருசித்த இந்திய அணி..! 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

Published by
அகில் R

டி20I: நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக இன்று இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது.

ஐசிசி (ICC) தொடர்களில் மட்டுமே சந்திக்கின்ற அணிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இன்று 8-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சந்தித்தனர். டி20 உலகக்கோப்பை தொடரின் 19-வது போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான விராட் கோலி, மலைபோல் நம்பி இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 4 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அவரை தொடர்ந்து நன்றாக விளையாட தொடங்கிய ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இவர்களை தொடர்ந்து பேட்டிங் வந்த ரிஷப் பண்டும், அக்சர் பட்டேலும் பொறுமையாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். அதிலும் ரிஷப் பண்ட் தேவையான நேரத்தில் அதிரடி காட்டி போட்டியை இந்திய அணியின் கட்டுக்குள் வைத்திருந்தார்.

இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையிலே இருந்தது. அதன் பிறகு 10 ஓவர்களை கடந்தவுடன் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சானது மிகச்சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் ரிஷப் பண்ட், சிவம் துபே, ஜடேஜா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க முடியாமல் திணறியது.

இதன் காரணமாக இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 31 பந்துக்கு 42 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி  இருந்தனர். மேலும், 120 ரன்கள் என்ற எளிய இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

அதனை தொடர்ந்து தொடக்க வீரர்களான பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக பாபர் அசாம் அவுட் ஆக அவருடன் உஸ்மான் கான் கூட்டணி அமைத்து விளையாடினார்.

சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் விழ ஒரு பக்கம் முகமது ரிஸ்வான் மட்டும் தட்டி தட்டி ரன்களை சேர்த்தார். இறுக்கமாக சென்ற இந்த போட்டி ரிஸ்வான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு விறுவிறுப்பாக நகர்ந்தது.

மேலும், அவரது விக்கெட்டை தொடர்ந்து பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடியது. இதன் மூலம் படிப்படியாக இந்திய அணி போட்டிக்குள் திரும்பி வந்தது. இறுதி வரை அங்கும் இங்கும் சென்ற போட்டியில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை வீசிய அர்ஷதீப் சிங் 12 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து, 1 விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றதுடன் இந்த தொடரின் 2-வது வெற்றியையும் பதிவு செய்து புல்லிபட்டியலிலும் முன்னிலை உள்ளது.

 

Published by
அகில் R

Recent Posts

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

3 minutes ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

9 minutes ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

21 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

1 hour ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

1 hour ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago