T20 Worldcup Champions 2024 [file image]
இந்திய அணி : இந்த ஆண்டில் தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஒரு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும், தற்போது வரை இந்த கொண்டாட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி இந்திய அணி வீரர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம், க்ஸ் என சமூகத்தளத்தில் உலகக்கோப்பையுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் விளையாடிய இந்திய அணி அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் 3 நாட்களாக அமெரிக்காவில் முடங்கி இருந்தனர்.
தற்போது, அங்கு இயல்பு வாழக்கை தொடங்கியவுடன் இந்தியா அணி இன்று பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘லாங் ரேஞ்ச்’ ஏர் இந்தியா விமானம் மூலம் நாளை இந்தியா திரும்பிவிடுவார்கள். இதற்கிடையில், இந்தியாவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நாளை பிரம்மாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இதனால் நாளை காலை 6 மணி அளவில் டெல்லியில் தரை இறங்கிய பின் இந்திய அணி முதலில் 9.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு செல்லவுள்ளனர். அதன்பின் பிரதமர் மோடியுடன் காலை உணவை முடித்து விட்டு, அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் மும்பை ஏர்போர்ட் வந்தடைவார்கள். அங்கிருந்து திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையுடன் சுமார் 1 கி.மீ தூரம் தொலைவில் உள்ள வான்கடே மைதானத்திற்கு செல்லவுள்ளனர்.
வான்கடே மைதானத்தில் வைத்து இந்தியா அணிக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற உள்ளது. அங்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷாவிடம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெற்றி பெற்ற டி20 உலகக்கோப்பையை அவரிடம் சமர்பிப்பார். அதன் பிறகு நாளை மாலை பொழுதில் இந்திய அணி விடைபெறவுள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று இதே போல திறந்த வெளி பேருந்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…