#CricketBreaking:இந்திய அணி அபார வெற்றி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

Published by
Dinasuvadu desk

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.இதில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று இருந்தது.

இதனைதொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இந்திய அணி:

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால்  48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்களை  எடுத்தது.இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான்(67),ரிஷாப் பந்த்(78),ஹார்திக் பாண்டியா(64) ஆகியோர் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.ரோஹித் சர்மா (37),விராட் கோலி(7) எதிர்பார்த்த அளவு விளையாடாமல் சற்று ஏமாற்றத்தை தந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான சர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும் நடராஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி:

அதன் பின்பு  330 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது தடுமாறியது.டேவிட் மாலன் 50 மற்றும் சாம் கரண் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை அட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களான மார்க் வுட் 3 விக்கெட்களையும் ஆதில் ரஷீத் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கோப்பையை கைப்பற்றிய இந்தியா: 

ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றிந்தது யார் இந்த கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவார் என்று பரபரப்பு கடைசி ஓவர் வரை தொற்றிக்கொண்டது.கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில்.இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்களை எடுத்தது.இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.

ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் ,டி20 வரிசையில் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி.

Published by
Dinasuvadu desk
Tags: ind vs eng

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

8 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

10 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

11 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

13 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago