இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதல் போட்டியானது நார்தாம்டனில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால்,இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில்,7 விக்கெட்களை இழந்து 177 ரன்களை எடுத்தது.
அதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவரில் 53 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.இதனைத் தொடர்ந்து,மழை பெய்ததன் காரணமாக போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டு டக்வொர்த் லூயிஸ் முறையின் படி 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையில்,இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது 19 வது ஓவரில், ஏமி எலன் அடித்த பந்தை ஹர்லீன் டியோல் அற்புதமாக கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஹர்லீனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும்,இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மன், ஹர்லீனை பாராட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,இந்திய கிரிக்கெட்டின் ‘லிட்டில் மாஸ்டரான’ சச்சின் டெண்டுல்கரும்,ஹர்லீனை பாராட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :”என்னை பொறுத்தவரை இது இந்த ஆண்டிற்கான ஒரு அற்புதமான கேட்ச் “,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…