இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹலுக்கு கொரோன உறுதி ..!

The corona has been confirmed for Indian cricketer Krishnappa Gowtham and Chahal who have visited Sri Lanka.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹலுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து,நடைபெற்ற டி20 போட்டியில்,இந்திய அணி 1 -2 என்ற கணக்கில்,இலங்கையிடம் தோற்றது.இதற்கிடையில்,இரண்டாவது டி -20 போட்டியின்போது,கிருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்,எட்டு வீரர்களின் குழுவில் இருந்த,மூத்த லெக்ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஸ்பின்-பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கே கவுதம் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

இதனால்,கிருனலுடன் சாஹல் மற்றும் கவுதம் ஆகியோர் மீண்டும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.மேலும்,பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்த மற்ற ஆறு வீரர்களான கிருனலின் சகோதரர் ஹார்டிக், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இன்று இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும்,மீதமுள்ள இந்திய அணி குழு இந்தியாவுக்குத் திரும்புவது உறுதி.

இலங்கை அரசின் வழிகாட்டுதல்களின்படி,கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட எவரும் குறைந்தது பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும், பின்னர் புதிய சோதனைகளை முடித்து நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.