T20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு, T20 போட்டியானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரானது வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும்.
இதுதொடர்பாக,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
முன்னர் அறிவித்தபடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று இடங்களைத் தவிர – அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய்,ஆகிய இடங்களில் போட்டிகள் முறையாக நடத்தப்படும்.மேலும்,ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி முடிந்த பின்னர்,அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு இரண்டு நாள் கழித்து டி20 உலகக் கோப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்று 1, இதில் 12 போட்டிகள் அடங்கும், அதில் எட்டு அணிகள் இருக்கும், அதில் நான்கு (ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு) சூப்பர் 12 களுக்கு தகுதி பெறும்.”
T20 போட்டியில்,பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா ஆகிய எட்டு அணிகளில் இருந்து நான்கு அணிகள் பின்னர் சூப்பர் 12 களில் முன்னேறி, முதல் எட்டு தரவரிசை டி-20 அணிகளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…