போங்கடா நீங்களும் உங்க கிரிக்கெட்டும் ..! பேட்டை இரண்டாய் உடைத்த வங்கதேச வீரர் ..!

Published by
அகில் R

டி20I: நடைபெற்று டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியின் போது விளையாடி கொண்டிருந்த போது வங்கதேச அணி வீரரான ஜேக்கர் அலி தனது பேட்டை இரண்டு துண்டாக உடைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தட்டு தடுமாறி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை விரட்டி பிடிக்க பேட்டிங் செய்த வங்கதேச அணி விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் நல்ல தொடக்கத்தை அமைத்து விளையாடி கொண்டிருந்தது.

வங்கதேச அணி 10 ஓவர்களை கடந்ததும், விக்கெட்டுகளையும் இழந்து அதிக டாட் பந்துகளையும் விளையாடி தடுமாறினார்கள். இதனால், விறுவிறுப்பாக போட்டி நகர தொடங்கியது. இறுதி ஓவர் நெருங்கும் போது களத்தில் வங்கதேச அணியின் வீரர்களான முகமதுல்லாவும், ஜேக்கர் அலியும் விளையாடி கொண்டிருப்பார்கள்.

அப்போது, 7 பந்துக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை எதிர்கொண்ட ஜேக்கர் அலி பந்தை அடித்து விட்டு 2 ரன்கள் ஓடுவார். அந்த பந்தை பவுண்டரி அடிக்க முடியாத விரக்தியில் அவரது பேட்டை அவரது காலை உபயோகப்படுத்தி இரண்டு துண்டாக உடைத்துவிடுவார். அதன் பின் புதிய பேட்டை உபயோகப்படுத்தி விளையாடுவார்.

இந்த குறிப்பிட்ட வீடியோவானது கிரிக்கெட் ரசிகர்களிடேயே வைரலாகி பரவி வருவதோடு, இது போன்ற செயல்களால் தான் வங்கதேச அணி தோல்வியடைந்து கொண்டே இருக்கிறது என கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

12 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

18 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

35 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

12 hours ago