ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் காபர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டர்சன் இல்லாததால், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜாக் லீச் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களில் ஒருவரை இங்கிலாந்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ஆண்டர்சனுக்கு காயம் ஏதும் இல்லை என்றும், நேற்று சுமார் ஒரு மணி நேரம் ஆண்டர்சன் நெட் பயிற்சி செய்தார். அவர் களத்தில் இறங்குவதற்கு தகுதியானவர் என்றும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், டிசம்பர் 16 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆண்டர்சன் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆஷஸ் 2019-ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயமடைந்தபோது, அவர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் (632) மூன்றாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…