ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் காபர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டர்சன் இல்லாததால், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜாக் லீச் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களில் ஒருவரை இங்கிலாந்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ஆண்டர்சனுக்கு காயம் ஏதும் இல்லை என்றும், நேற்று சுமார் ஒரு மணி நேரம் ஆண்டர்சன் நெட் பயிற்சி செய்தார். அவர் களத்தில் இறங்குவதற்கு தகுதியானவர் என்றும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், டிசம்பர் 16 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆண்டர்சன் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆஷஸ் 2019-ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயமடைந்தபோது, அவர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் (632) மூன்றாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…