MS Dhoni's request to the fielders! [Image Source : PTI]
வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது என நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின் தோனி பேச்சு.
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில், சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி 15 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, ஐபிஎல் தொடர் மிகப் பெரியது, மற்ற தொடர்களை போல இந்த தொடரின் இறுதிப் போட்டி என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வெற்றிகள் எல்லாம் எங்களின் 2 மாத கடின உழைப்பு தான் காரணம். இதற்கு அனைவரும் பங்களித்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய தோனி, வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பேன். என் உணர்வுகளுக்கு தோன்றும் விதமாக நான் ஃபீல்டிங்கை அமைப்பேன். அது பல நேரங்களில் அணிக்கு பயனளித்தும் உள்ளது. இதனால், நான் ஃபீல்டர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, உங்களின் கவனம் எப்போதும் என் மீது இருக்க வேண்டும், கேட்ச் விட்டால் கூட நான் பெரிதும் ரியாக்ட் செய்ய மாட்டேன், ஆனால், என் மீது இருந்து பார்வையை மட்டும் எடுத்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வு குறித்த கேள்விக்கு, இதைப்பற்றி முடிவெடுக்க 8, 9 மாதங்கள் உள்ளது. இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. ஏன் இப்போதே அதைப்பற்றி யோசித்து, தலைவலி ஏற்படுத்திக்க வேண்டும். விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது நிர்வாக பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சென்னை அணியோடு இருப்பேன் என தெரிவித்திருந்தார்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…