shreyas iyer [File Image]
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். வரவிருக்கும் ஆசிய 2023 கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனை முன்னிட்டு பெங்களூரில் தற்போது ஆறு நாள் கண்டிஷனிங் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், முதுகில் அறுவை சிகிச்சை நடைபெற்றபோது அந்த வலி தனக்கு மிகவும் வேதநாயக இருந்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வேதனை தரும் வலி
இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய முதுகில் வலி ஏற்படும்போது எனக்கு வந்த வலி மிகவும் கொடியது. அந்த காலம் “வேதனை தரும் வலி”நான் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பே எனக்கு சிறிது காலமாக முதுகில் இந்த பிரச்சினை இருந்தது, ஆனால் நான் ஊசிகளை எடுத்துக்கொண்டு பல வழிகளில் சென்று நான் நிலையாக இருக்கவேண்டும் என நினைத்தேன்.
அறுவை சிகிச்சை
வலி மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை செய்யும்போது என்னுடைய நரம்பு பகுதி மிகவும் வலித்தது. அந்த நேரத்தில், நான் வலியில் துடித்தேன். இப்பொது நான் விளையாட வரும் ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை வலி இருந்தது.
வலி குறையாமல் இருப்பது கடினம்
நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கும்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டு அந்த காயம் வலி கூட குறையாமல் இருந்தால் எப்படி இருக்கும். நம்மளுடைய மனதில் கெட்டதாக பல விஷயங்கள் தோணும். அந்த தருணத்தில் என்னை உற்சாகபடுத்த உதவி ஊழியர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் இருந்தனர். காயத்தில் இருந்து மீண்டவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சிகளை செய்ய தொடங்கினேன். வரவிருக்கும் போட்டிக்களில் பழைய மாதிரி விளையாடுவேன்” எனவும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…