De Kock Wife Smart Watch Warning[file image]
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியான லக்னோ-சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து 90-5 என தடுமாறி வந்தது. அதன் பிறகு ஜடேஜா மற்றும் மொயின் அலியின் கூட்டணியில் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்த ஐபிஎல் தொடர் தொடக்கத்தில் இருந்தே இறுதி கட்டத்தில் களமிறங்கி ரசிகர்களுக்கு சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வேலையை எம்.எஸ்.தோனி செய்து வருகிறார். அதே போல நேற்றைய போட்டியிலும் அவர் 18-வது ஓவரின் கடைசி பந்தில் களமிறங்கினார். அவரை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காட்டினாலே, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் சத்தம் பெரிதாக இருக்கும்.
அதே நேரம் அவர் களமிறங்கிறார் என்றால் மைத்தனத்தில் இருக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தின் சத்தம் மைதானத்தையே உலுக்கும் அளவிற்கு இருக்கும். நேற்றும் அதே போல தோனி களமிறங்கும் பொழுது வழக்கத்திற்கு மாறாக சத்தம் உச்சத்தை தொட்டது. லக்னோ அணியின் வீரரான டி காக்கின் மனைவி சாஷா டி காக்கின் ஸ்மார்ட் வாட்ச் ஒரு வார்னிங் கொடுத்துள்ளது. அதை புகைப்படம் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு உள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவரது ஸ்மார்ட் வாட்சில் ஒரு வார்னிங் மெசேஜ் ஒன்று வந்திருக்கும். அந்த மெசேஜில் “சுற்றுச்சூழலின் ஒலி அளவு 95 டெசிபல்களை (Decibal) தாண்டி உள்ளது. இந்த நிலையை இன்னும் 10 நிமிடங்களுக்கு நீடித்தால் தற்காலிகமாக காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது” என்று இருக்கும். தற்போது அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியிலும் தோனி அதிரடியாக விளையாடி 9 பந்துக்கு 3 ஃபோர், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்திருப்பார். மேலும், அவர் 311.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…