ms dhoni CSK [Image source : file image ]
தோனி அடுத்த வருஷமும் விளையாடுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கு என சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
16-வது ஐபிஎல் சீசன் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், நேற்று நடைபெற்ற போட்டி சென்னை அணிக்கு இந்த சீசனில் கடைசி ஆட்டம் என்பதால், மைதானத்தில் ரசிகர்கள் வீரர்களை வரவேற்க காத்திருந்தனர். போட்டி முடிந்த பிறகு, சென்னை வீரர்கள் சேப்பாக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், மைதானத்தை சுற்றி வலம்வந்தனர். கிப்ட் களையும் தூக்கி ரசிகர்களுக்கு வீசினார்கள்.
போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தோனி அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எனவே ரசிகர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். எப்போதும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
தோனி அடுத்த சீசனும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் உள்ளார்கள்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…