நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்கியது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பின்னர் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் விஜய் களமிறங்கினர்.தொடக்க முதலே அதிரடியாகிய விளையாடிய தவான் 87 பந்துகளில் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார்.பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்கான் வீரர் ரஷித் கான் ஓவரை தவான் வெளுத்து வாங்கினார்.
ரஷித் கான் 7 ஓவரில் 51 ரன்கள் கொடுத்துள்ளார்.மேலும் தவான் புதிய சாதனையை படைத்துள்ளார்.இந்திய வீரர்களில் இதுவரை யாரும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் சதம் அடித்ததில்லை.அந்த சாதனையை முதல் இந்திய வீரராக தவான் செய்தார்.
பின்னர் தவான் 107 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இந்திய அணி 46.4 ஓவர்களில் 258 ரன்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.ராகுல்(41), விஜய்(94) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 104.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான்(107),விஜய்(105),ராகுல்(54),பாண்டியா 71 ரன்கள் அடித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…