நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி, விளையாடும் உள்நாட்டு தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டி-20 போட்டி ஜனவரி-3 இல் மும்பையிலும், 2-வது டி-20 போட்டி ஜனவரி-5 இல் புனேவிலும், 3-வது டி-20 போட்டி ஜனவரி-7 இல் ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி-10 இல் கவுஹாத்தியிலும், 2-வது ஒருநாள் போட்டி ஜனவரி-12 இல் கொல்கத்தாவிலும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி-15 இல் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி-18 இல் ஹைதராபாதிலும், 2-வது ஒருநாள் போட்டி ஜனவரி-21 இல் ராய்ப்பூரிலும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி-24 இல் இந்தூரிலும் நடைபெறுகிறது.
முதல் டி-20 போட்டி ஜனவரி-27 இல் ராஞ்சியிலும், 2-வது டி-20 போட்டி ஜனவரி-29 இல் லக்னோவிலும், 3-வது டி-20 போட்டி பிப்-1இல் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்-9 இல் நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி பிப்-17 இல் டெல்லியில் நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் மார்ச்-1 மற்றும் மார்ச்-9இல் தரம்சாலா மற்றும் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
முதல் ஒருநாள் போட்டி மார்ச்-17இல் மும்பையிலும், 2-வது ஒருநாள் போட்டி மார்ச்-19இல் விசாகபட்டினத்திலும், 3-வது ஒருநாள் போட்டி மார்ச்-22இல் சென்னையிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…