நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிப்பு- பிசிசிஐ

Default Image

நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி, விளையாடும் உள்நாட்டு தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ  அறிவித்துள்ளது. இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி-20 போட்டி ஜனவரி-3 இல் மும்பையிலும், 2-வது டி-20 போட்டி ஜனவரி-5 இல் புனேவிலும், 3-வது டி-20 போட்டி ஜனவரி-7 இல் ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி-10 இல் கவுஹாத்தியிலும், 2-வது ஒருநாள் போட்டி ஜனவரி-12 இல் கொல்கத்தாவிலும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி-15 இல் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி-18 இல் ஹைதராபாதிலும், 2-வது ஒருநாள் போட்டி ஜனவரி-21 இல் ராய்ப்பூரிலும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி-24 இல் இந்தூரிலும் நடைபெறுகிறது.

முதல் டி-20 போட்டி ஜனவரி-27 இல் ராஞ்சியிலும், 2-வது டி-20 போட்டி ஜனவரி-29 இல் லக்னோவிலும், 3-வது டி-20 போட்டி பிப்-1இல் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்-9 இல் நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி பிப்-17 இல் டெல்லியில் நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் மார்ச்-1 மற்றும் மார்ச்-9இல் தரம்சாலா மற்றும் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் போட்டி மார்ச்-17இல் மும்பையிலும், 2-வது ஒருநாள் போட்டி மார்ச்-19இல் விசாகபட்டினத்திலும், 3-வது ஒருநாள் போட்டி மார்ச்-22இல் சென்னையிலும் நடைபெறும் என பிசிசிஐ  அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்