நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது.
அதற்கு பிறகு களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது, நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை.
14 நாட்கள் தனிமைப்படுத்தலும் ஆட்டத்திற்கு உதவவில்லை. நான் மெதுவாக தொடருக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். அதே போல் பலதரப்பட்ட விஷயங்களையும் நாம் முயற்சிக்க வேண்டி உள்ளது, அதாவது சாம் கரண் அல்லது ரவீந்திர ஜடேஜாவை முன்னால் இறக்கிப் பார்க்க வேண்டி உள்ளது.
மேலும் 217 ரன்கள் விரட்டுவதற்கு ஒரு நல்ல தொடக்கம் வேண்டும் அது எங்களுக்கு நிகழவில்லை.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். மேலும் எங்களது அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் பிழை செய்தனர் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு பேசிய தோனி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு நேற்றைய போட்டியில் விளையாடவில்லை என்பதை பற்றி தோனி கூறியுள்ளார் அதில் பேசிய தோனி எங்கள் அணியில் ராயுடு 100% பிட்டாக இல்லை என்பதால் அவருக்கு மாற்றாக ருதுராஜ் விளையாடுகிறார் என்று கூறியுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…