டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. நமீபியாவில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், ஜே.ஜே ஸ்மிட் 31 ரன்களும் குவித்தனர். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 2 விக்கெட்கள் எடுத்தார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நமீபியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. முடிவில் இலங்கை அணி19 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதில் வென்றது. ஜான் ஃபிரைலின்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…