டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 168/6 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இன்று அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் (5), ரோஹித் (27) என பெரிதாக ஸ்கோர் அடிக்க தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும்(14) சோபிக்கவில்லை. விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ஹர்டிக் பாண்டியா அவ்வப்போது சிக்ஸர், பௌண்டரி என விளாசினார்.
கோலி 50 ரன்கள் எடுத்த நிலையில் ஜோர்டனிடம் ஆட்டமிழந்தார். இறுதியில் பாண்டியா, ரிஷப் பந்த்துடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதமடித்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 4 பௌண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களும், கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…