டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர்-12 போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பஸ் 28 ரன்களும், உஸ்மான் கானி 27 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்களை சாய்த்தார்.
145 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 66 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…