டி-20 உலகக்கோப்பை தொடரில் முதல் சதமடித்த ரூஸோவ், தென் ஆப்ரிக்க அணி அதிரடியாக விளையாடி 205 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா தொடக்கம் முதலே அதிரடியைக்காட்டியது. கேப்டன் தெம்பா பவுமா 2 ரன்னில் அவுட் ஆனாலும் அதன் பின் வந்த டி காக் – ரூஸோவ் ஜோடி அதிரடியாக விளையாடி 168 ரன்கள் சேர்த்தது. டி காக் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். ரூஸோவ் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.
20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இந்த உலகக்கோப்பை 2022 தொடரில் முதல் சதத்தை ரூஸோவ் பதிவு செய்தார். ரூஸோவ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேச அணிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…