#T20 WorldCup 2022: டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் .!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு.

ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிட்னியில் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியுடன் எஞ்சியுள்ள ஒரு போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உறுதியாகும். தென் ஆப்பிரிக்க அணிக்கு மீதமுள்ள இரன்டு போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் இன்று களமிறங்குவதால்  இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான்(w), பாபர் அசாம்(c), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா

தென்னாப்பிரிக்க அணி: குயின்டன் டி காக்(w), டெம்பா பவுமா (c), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்